யாழ் நல்லை ஆதீனம் மற்றும் ஆயர் இல்லத்திற்கு ஜனாதிபதி விஜயம்
யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நல்லை ஆதீனத்தில் (Nallai Aatheenam) சந்தித்து ஆசிபெற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதியின் குறித்த விஜயமானது நேற்றைய (02) தினம் இடம்பெற்றுள்ளது.
தேசிய பாதுகாப்பு
இந்த விஜயத்தின் போது யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை, இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள வசாவிளான் பிரதேச விடுவிப்பு, இன்டிகோ விமான சேவையை ஆரம்பித்தல், இலங்கை இந்தியாவிற்கான கப்பல் சேவையை ஆரம்பித்தல் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் (P. S. M. Charles), தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka), முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake), முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் (Vijayakala Maheswaran) ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |