அதிபர் தேர்தல் : வாக்களிக்கத் தகுதி பெற்ற 76 ஆயிரம் புதிய வாக்காளர்கள்
Election Commission of Sri Lanka
Sri Lanka
Sri Lanka Presidential Election 2024
By Sathangani
சிறிலங்காவின் (Sri Lanka) எதிர்வரும் அதிபர் தேர்தலுக்காகச் (Presidential Election) சுமார் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரம் பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி வரையில் 18 வயதைப் பூர்த்தி செய்த புதிய வாக்காளர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri lanka) தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.
புதிய வாக்காளர்கள்
அதற்கமைய, எதிர்வரும் அதிபர் தேர்தலுக்குச் சுமார் 76 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாகத் தகுதி பெற்றுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அதிபர் தேர்தலுக்கான திகதி ஜூலை இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்