தமிழர்களுக்கெதிரான கொடூர பயங்கரவாத தடைச் சட்டம்...! NPP அரசிடம் தமிழ் எம்.பி கோரிக்கை
வடக்கு - கிழக்கு மக்களை பாதிக்கும் கொடூர பயங்கரவாத தடைச் சட்டத்தை தேசிய மக்கள் ஆட்சியில் நீக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் (Gnanamuttu Sirinesan) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் பயங்கரவாத தடைச் சட்டம் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது வேதனை அளிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி அரசின் பாதாளக் குழுவுக்குவுக்கு எதிரான செயற்பாடு, போதைப்பொருளுக்கு எதிரான செயற்பாடு மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை என்பவற்றை நாம் ஆதரிக்கின்றோம்.

இவற்றில் குற்றம் காண விரும்பவில்லை. ஜே.ஆர். ஜயவர்தனவால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமானது மிகவும் பயங்கரமானது. அந்தச் சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விடயம்.
இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் மீறப்பட்டன. பேரவலங்கள் அரங்கேறின. இந்தச் சட்டத்தின் கீழ் ஜே.வி.பி. தோழர்களும் பாதிக்கப்பட்டனர்.
வடக்கு, கிழக்கு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். எனவே, அது விரைவில் நீக்கப்பட வேண்டும். அதேபோல் பொறுப்புக்கூறலும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 நாட்கள் முன்