மகிந்தவிற்கு மீண்டும் பிரதமர் பதவி - மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள தகவல்!
மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் யோசனை எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் என கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு கட்சியில் இருந்து முன்மொழிவு வந்துள்ளதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் வதந்தி
மேலும் அவர்,
"மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் யோசனை என்பது எதிர்க்கட்சிகளின் வதந்தியாகும்.
எதிர்க்கட்சியினர் பொய்யான தகவல்களை உருவாக்குகிறார்கள், இருப்பினும் நாங்கள் ஒரு கட்சியாக மிகவும் வலுவாக செயல்படுகின்றோம்.
அமைச்சரவை திருத்தங்கள் என்பது அதிபருக்கு சொந்தமான விடயம் என்பதால், கட்சி எனும் ரீதியில் நாங்கள் குறித்த விடயத்தில் தலையிட மாட்டோம்.
அப்படிப்பட்ட யோசனைகளும் எம்மிடம் இல்லை.
மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் சொல்வது போல் இல்லை, கட்சியில் இருந்து மக்கள் பலத்துடன் அதைச் சரியாகச் செய்வோம்." இவ்வாறு சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
