அதிரும் கொழும்பு: ஆயிரக்கணக்கான மக்களுடன் போராட்டம் முன்னெடுப்பு
கொழும்பின் பிரதான இடங்களில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் வர்த்தகர்கள், ஊழியர்கள் என அனைவரும் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கத்தை பதவி விலகுமாறு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கொழும்பு புறக்கோட்டை பகுதியை சேர்ந்த வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து எமது நாடு எமக்கு வேண்டும் என்ற கோசங்களுடன் பேரணியை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது பேரணியாக முன்னெடுக்கப்பட்டு காலிமுகத்திடலை நோக்கி செல்லவுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விரிவான செய்திகளுக்கு காணொளியை பார்வையிடுங்கள்.