யாழில் யுத்த காலத்தில் ஏவப்பட்ட வெடிகுண்டு ஒன்று மீட்பு
யாழில் மண்ணில் புதைந்திருந்த எறிகணை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயிலிற்கு அருகாமையில் வெடிக்காத நிலையில் இந்த வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வெடிகுண்டு இன்றைய தினம் (18) பிற்பகல் 12:00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
ஏவப்பட்ட எறிகணை
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த பகுதியில் வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்க்காக அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த போது மண்ணில் புதைந்திருந்த நிலையில் எறிகணை ஒன்றினை கண்டுள்ளனர்.
இந்நிலையில் உடனடியாக கட்டுமான வேலைகளை நிறுத்திவிட்டு சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, பிற்பகல் 5:00 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி காவல்துறையினர் குறித்த வெடிகுண்டை மீட்டு சென்றுள்ளனர்.
இது யுத்த காலத்தில் ஏவப்பட்ட எறிகணையாக இருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






