தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
Janatha Vimukthi Peramuna
By Dhilak
தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு உத்திகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பாதுகாப்பு யுக்திகளுக்கு, முன்னாள் பாதுகாப்பு படையினர் பல உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று, அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், புதிய முறைகள் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு யுக்திககள்
இதுவரை அண்மைய பாதுகாப்பு யுக்திகளை அக்கட்சி கையாண்ட போதிலும் அதையும் தாண்டிய புதிய வழிமுறைகள் தேவை என இக்குழுவினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |