முல்லைத்தீவில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்
Mullaitivu
SL Protest
Sri Lanka Prevention of Terrorism Act
By Vanan
வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைபிரனை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினர் வேண்டாம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்ற பதாதையினை தாங்கியவாறு எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், கருத்து சுதந்திரம் பறிபோகும் என்றும் இது முற்றுமுழுதாக வேண்டாம் என்பதையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
