இராணுவத்தின் அடாவடியை எதிர்த்து கொழும்பில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்கார்கள்: நாட்டு மக்களுக்கு பகிரங்க அழைப்பு
கொழும்பு - காலிமுகத்திடலில் பதிவாகிய சம்பவத்தை கண்டித்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தை முற்றுகையிட்ட முப்படையினர் கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். இதன் போது நடாத்தப்பட்ட தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந் நிலையில், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை இந்த போராட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர்.