திடீரென குவிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்: திட்டமிடப்படி வெளியேறிய காவல்துறை! நேரடி ரிப்போர்ட் (காணொளி)
குவிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்
இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தை முற்றுகையிட்ட முப்படையினர் கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இது தொடர்பில் சம்பவ இடத்தில் இருந்த இளைஞரொருவர் அப்பகுதியில் பதிவாகிய, தான் நேரடியாக பார்த்த சம்பவங்களை எமது செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் பாதுகாப்பிற்காக இருந்த காவல்துறையினர் அனைவரும் காலிமுகத்திடல் பகுதியில் இருந்து சென்றுவிட்டனர்.
நேரடியாக பார்த்த சம்பவங்களை பகிர்ந்த இளைஞன்
இதனை தொடர்ந்து பெருமளவு விசேட அதிரடிப்படையினர் திடீரென இப்பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டக்களப்பகுதியை முழுமையாக சுற்றிவளைத்துவிட்டனர்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் எமக்கு ஏற்கனவே தகவல் கிடைத்திருந்தது. நாங்களும் விழிப்பாகவே இருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
நள்ளிரவில் இராணுவத்தினர் கொடூர தாக்குதல்: முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் போராட்டக்களம்..! நீடிக்கும் பதற்றம் |