பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான சிறுமிக்கு நீதிகோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
Sri Lankan Tamils
Vavuniya
By Independent Writer
Courtesy: Kabil
பெளத்த மதகுரு ஒருவரால் சிறுமி பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு அவருக்கு பின்னர் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் கண்டனம் தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்ப்போம் என்ற கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மத குரு தொடர்பான வாசகங்கள்
வவுனியா மக்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத குரு தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததோடு பௌத்த பிக்குவுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டிருந்தது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் மற்றும் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்