மாணவர் எழுச்சியை குழப்ப முயற்சி!! புலனாய்வாளர்களுடன் இணைந்து தமிழ் கட்சிகளும் களத்தில்??
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் திரண்டெழுந்து சிறிலங்காவின் சுதந்திர தினத்தை ஒரு கரி நாளாகப் பிரகடனம் செய்து மேற்கொண்டுவருகின்ற போராட்டத்தை குழப்புவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் சிங்கக் கொடிகளுடன் ஊர்வலத்தின் மத்தியில் ஊடுருவி முழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாகவும், அருன் என்ற கைக்கூலி 40 பேருடன் தங்களுடைய பேரணியைக் குழப்புவதற்கு முயன்றதாகவும், அவரின் அந்தச் செயலுக்கு 400 பொலிசார் பாதுகாப்பு வழங்கியதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தார்கள்.
கிழக்கில் பேரணி ஏற்பாடுகளை மேற்கொண்டுவந்த கிழக்கு பல்கலைக்கழக மானவர்களை சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரும், பிள்ளையான் கும்பலும் மிரட்டி, அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து, அவர்களில் சிலரை ஏற்பாடுகளைக் கைவிட்டுவிட்டுச் செல்லும்படி செய்துள்ளதாகவும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அதேபோன்று யாழில் தமிழ் தேசியத்தை உரக்கப் பேசுகின்றவரும், தனது அம்மாவின் சொல்லை மாத்திரம் கேட்டு அரசியல் செய்துவருபவருமான ஒரு அரசியல்வாதியும், மாணவர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துவருவதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
பேரணிக்கும் மக்கள் எழுச்சிக்கும் எதிராக நிலைப்பாடு எடுத்த அந்த அரசியல்வாதியை அணுகி அவரிடம் ஆதரவு கோரியபொழுது, 13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மாணம் நிறைவேற்றினால் மாத்திரமே நாங்கள் ஆதரவுதருவோம் என்று அந்த அரசியல்வாதி கூறியதாக தெரிவிக்கின்றார்கள்.
