இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்....

Missing Persons Sonnalum Kuttram
By Vanan Oct 28, 2023 01:57 PM GMT
Report

ஈழத்து தாய்மார் என்றவுடன் நம் எல்லோரின் கண்களின் முன்னும் வந்துபோகும் உருவம் வீதிவீதியாக தமது உறவுகளை தொலைத்துவிட்டு தேடி அலையும் தாய்மார்களின் முகங்கள் தான்.

அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களின் வலிகளில் அவர்களும் ஓர் அங்கமாகி விட்டார்கள்.

தமது உறவுகளை தொலைத்து அவர்களை வலிந்து காணாமல் ஆகச்செய்த அரச இராணுவம் அதன் ஒட்டுக் குழுக்களுக்கும் கூட அவர்கள் இன்றுவரை பெருந்தலையிடி என்றே கூறிக்கொள்ளலாம்.   

யார் தான் விமர்சிக்க முடியும் 

2500 நாட்களைக்கடந்து தமது உறவுகளுக்காகவும் ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும் சுழற்சி முறையில் உண்ணாவிரதமிருந்து நீதியை வலியுறுத்தி வந்தவர்கள் அவர்கள்.   

இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்.... | Protest Of Relationships Of The Disappeared

ஆனால் அவ்வப்போது அரசியல் சாயத்தைப் பூசிக் கொண்ட நிகழ்வுகள் இடம்பெற்றாலும், எமது தாயகப் பிரதேசத்திலும் சரி ஈழத்தமிழர்களிடத்திலும் இப்படியாக நீண்ட தொடர்போராட்ட இயங்கியலை யாருமே கொண்டிராததாலும், அதேநேரம் அவர்கள் கண்ணீரோடு தேடிக்கொண்டிருப்பது எமது தேசத்தின் வேர்களாக எம்மைக் காத்து நின்ற உன்னதமான மறவர்களாக இருக்கும் நிலையில், அவர்களை தேடித்தேடி தமது பொழுதுகளை கழித்துக்கொண்டுருக்கும் அவர்களை யார்தான் விமர்சிக்க முடியும்.   

அப்படி விமர்சிப்பவர்கள் தங்களை ஒருமுறை சுயபரிசோதனை செய்தாக வேண்டும்.  அல்லது அவர்கள் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு எம் ஒவ்வொருவரிடத்திலும் இருந்துகொண்டே இருக்கிறது.   

அந்த அளவுக்கு கௌரவத்தோடு நோக்கப்படவேண்டியவர்களாக நாம் ஒவ்வொருவரும் பாதுகாக்கவேண்டிய அந்த தாய்மாரின் கலப்பில்லாத அந்த போராட்டம் இன்று என்ன நிலையில் இருக்கிறது.   

சந்தி சிரிக்கிறது போராட்டம்

ஆமை புகுந்த வீடு என்னவோ ஆகும் என்று சொல்லுவார்களே அப்படியாக சந்தி சிரிக்கிறது போராட்டம்.   

இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்.... | Protest Of Relationships Of The Disappeared

அந்த தாய்மாரியே திட்டமிட்டு புகுத்தப்பட்டவர்களாலோ அல்லது சலுகைகளுக்கும் சன்மானங்களுக்குமாக விலைபோனவர்களோ இன்று நாலுபேர் சிரிக்குமளவிற்கு அழைத்து வந்து விட்டிருக்கிறர்கள். 

இவ்வளவு நாளும் இங்கு நிகழ்ந்த சிலவற்றை கண்டும் கடந்துபோனவர்கள் இன்று நிலைமை கை மீறி போய் விட்டதோ என எண்ணுமளவிற்கு மாறியிருக்கிறது. 

“முல்லைத்தீவில் நடைபெற்ற போராட்டத்தின் போது இவர்களிடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட போது, அங்கிருந்தவர்கள் அதனை சமாளித்துக்கொண்டனர்.

ஊடகங்களும் அதனை பெரிதுபடுத்தாது விட்டுச் சென்றது. ஆனால் இன்று வவுனியாவில் தங்களுக்குள் மோதிக்கொண்டவர்கள் காவல் நிலையம் வரை செல்லாது தவிர்த்து இருக்க வேண்டும்.

அவ்வாறு சென்றிருந்தாலும் காவல் நிலையத்தில் சமாதானமாகி விலகிச் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் போராட்டங்கள் எங்கும் காவல்துறையினரின் அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கிறவர்கள் இன்று அதே காவல்துறையினரிடம் சென்று ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி முறையிடுகிறார்கள்.

எந்த காவல்துறையினர் எங்கள் போராட்டத்தை நசுக்குகின்றார்கள், எங்களை அச்சுறுத்துகிறார்கள் என் குற்றம் சாட்டி நின்றோமோ, அதே காவல்துறையினரிடம் சென்று எமக்குள் மாறி மாறி குற்றம் சாட்டி முறையிட்டு நிற்கிறோம். 


தயவு செய்து பிரச்சினைகளை உங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். உறவுகளை இழந்த உங்களின் கண்ணீரை கொச்சைப்படுத்த அனுமதியாதீர்கள்.

ஒரு வேளை அந்த உறவுகள் இன்று நீங்கள் பிணக்குத் தீர்க்கச் சென்றிருக்கும் சிறிலங்க அரச இயந்திரத்தால் ஏனையவர்களைப் போலவே படுகொலை செய்யப்பட்டிருந்தால், அவர்களின் அந்த புனித ஆத்மா அவர்கள் பட்ட வலிகளையும் மறந்து கண்ணீர் வீட்டு ஓவென்று அழும்.

உங்கள் இத்தனை வருட போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.   

எமது தேசத்திற்காக தங்களை தியாகதித்த அந்த புனிதர்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.   

நாங்கள் சிறிலங்கா அரசிடம் நீதிகேட்டுப் போராடவில்லை.  அவர்கள் நிகழ்த்திய அநீதிகளுக்காக நீ்திகோரிப் போராடியவர்கள்” எனச் சிலர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025