இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதா : கேள்வியெழுப்பும் வசந்த முதலிகே
சத்தியாகிரக போராட்டத்தின் போது 27 பட்டதாரிகள் கைது செய்யப்பட்டமையினால், இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதா என்ற பிரச்சினையை எழுப்புவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே (Wasantha Mudalige) கேள்வியெழுப்பியுள்ளார்.
தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று (28) அதிகாலை 2:00 மணி முதல் 2:30 வரை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
27 பட்டதாரிகள் கைது
குறித்த முகநூல் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பாளர் உட்பட 27 மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் பல கோரிக்கைகளின் அடிப்படையில் முந்தைய அரசாங்கங்களுடனும் தற்போதைய அரசாங்கத்துடனும் கலந்துரையாடல்களை நடத்தினர்.
தேசிய மக்கள் சக்தி
அரசாங்கங்கள் தீர்வுகளை வழங்காமல் தாமதப்படுத்தியதன் காரணமாக, சுகாதார அமைச்சுக்கு முன்னால் உள்ள பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக வசந்த முதலிகே சுட்டிக்காட்டுகிறார்.
இந்த சம்பவம் இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாதா என்ற பிரச்சினையை எழுப்பப்படுகிறது.
போராட்டம் நடத்துவது பற்றி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு சொல்லத் தேவையில்லை, தற்போதைய ஆட்சியாளர்கள் பல சந்தர்ப்பங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
