காணிகளை விடுவிக்ககோரி ஐந்தாவது வாரமாகவும் தொடரும் போராட்டம்
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும்
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாகவும் எனவே தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை இராணுவத்தினர் தமது தேவைக்கே விவசாயம் செய்து வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் உரும்பிராயில் உள்ள தனியார் மரக்கறி கொள்வனவு நிலையத்தில் இராணுவத்தினர் மரக்கறிகளை விற்பனை செய்வதை மக்கள் ஆதாரத்துடன் ஊடகங்களுக்கு தகவல்களை படங்களுடன் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்