எதிர்காலத்தில் எம்.பிக்களுக்கு கிடைக்கப்போகும் ஓய்வூதியம்
தனது எதிர்கால அரசாங்கத்தில், நிரந்தர வருமானம் இல்லாத எம்.பி.க்களுக்கு ஓய்வூதியத்தை மீண்டும் வழங்குவதற்கான சட்டமூலத்தை கொண்டுவரவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த துணைத் தலைவர், வழக்கறிஞர் விஜயதாச ராஜபக்ச,தெ ரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குப் பேசிய முன்னாள் எம்.பி., தேசிய மக்கள் சக்தி இந்த ஓய்வூதியங்களை ஒரு பிரபலமான தலைப்புக்காக ரத்து செய்துள்ளதாகக் கூறினார்.
உதவியற்றவர்களாக தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள்
இதன் காரணமாக, தங்கள் சொந்தக் கட்சியின் சுமார் 40 எம்.பி.க்கள் உதவியற்றவர்களாகிவிட்டதாக வழக்கறிஞர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் கடந்த 17 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |