இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் கஜேந்திரகுமார் ஏற்றுக்கொண்ட முக்கிய விடயம்

Sri Lankan Tamils India
By Theepan Dec 31, 2025 12:31 PM GMT
Report

புதிய அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் இழுபறிகளில் காலம் கடத்தப்படுகின்றதே தவிர, தேர்தல் வைப்பதற்கான எந்த உத்தேசமும் இருப்பதாகத் தெரியவில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், மாகாண சபைக்கான தேர்தல்களை நடாத்துவதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா கொடுக்க வேண்டும் என்று கோரியபொழுது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதனை ஏற்றுக்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், குறைந்தபட்சம் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதனூடாக மாத்திரமே அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய அதிகாரங்களைக் கையிலெடுத்து, இயலக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை வடக்கு-கிழக்கில் உருவாக்க முடியும்.

ஈழத்தமிழர் மரபை உயிர்ப்பிக்கும் மாபெரும் கலை விழா லண்டனில்

ஈழத்தமிழர் மரபை உயிர்ப்பிக்கும் மாபெரும் கலை விழா லண்டனில்

அரசியல் சாசனம் வருமா

அரசாங்கம் பதவிக்கு வந்து புதிய அரசியல் சாசனத்தைப் பற்றிப் பேசினாலும்கூட, அந்த அரசியல் சாசனம் வருமா? வராதா? அவ்வாறான அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரமான நிலைத்திருப்பதான தீர்வு எட்டப்படுமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் கஜேந்திரகுமார் ஏற்றுக்கொண்ட முக்கிய விடயம் | Provincial Council Election Promise

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கு இன்று இருக்கக்கூடிய சட்டபூர்வமான பொறிமுறை என்பது மாகாணசபை மாத்திரமே.

ஆகவே, அந்த மாகாணசபை அதிகாரங்களைக் கையிலெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வலியுறுத்தியது மாத்திரமல்லாமல், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கககூடிய ரெலோ, புளொட், சமத்துவக் கட்சி, ஜனநாயகப் போராளிகளுடன் இணைந்து தேர்தலை வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு--கிழக்கின் பல மாவட்டங்களில் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

இன்று தமிழரசுக் கட்சியும் இணைந்து தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்ற பொது விடயத்தில் ஒருமித்து செயற்பட ஆரம்பித்திருக்கின்றோம்.

அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஜெயசங்கர் அவர்களை தமிழ் கட்சிகள் சந்தித்த பொழுது, மாகாண சபைக்கான தேர்தல்களை நடாத்துவதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா கொடுக்க வேண்டும் என்று கோரியபொழுது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதனை ஏற்றுக்கொண்டார்.

தையிட்டி விகாரையில் முளைக்கும் புத்தர் சிலை - வதந்தி என்கிறார் விகாராதிபதி

தையிட்டி விகாரையில் முளைக்கும் புத்தர் சிலை - வதந்தி என்கிறார் விகாராதிபதி

மாகாணசபைத் தேர்தல்

ஆகவே மாகாணசபைத் தேர்தல்களை நடாத்த வேண்டும் என்பதில் சகல கட்சிகளும் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் கஜேந்திரகுமார் ஏற்றுக்கொண்ட முக்கிய விடயம் | Provincial Council Election Promise

இதன் மூலம் இந்த விடயத்தில் நாங்கள் ஒன்றாகவே இருக்கின்றோம் என்பதை இந்தியாவிற்கும் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு என்பது ஒற்றையாட்சிக்கு வெளியேதான் இருக்க முடியும் என்பதில் தமிழ் கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து நிலவுகிறது.

அது சமஷ்டியாகவோ, தேசங்களின் கூட்டாட்சியாகவோ அல்லது வேறுவிதமாகவோ அமையலாம்.

ஆகவே புதியதோர் அரசியல் சாசனமானது தமிழ் மக்களுக்கான எத்தகைய தீர்வை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதில் தமிழ்த்தரப்பு அனைத்தும் ஒருமித்த கருத்துக்கு வந்து அந்த விடயம் அரசிற்கு முன்மொழியப்பட வேண்டும்.

சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக ஜனாதிபதியாக இருந்தபொழுது, பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் ஒரு தீர்வு முன்மொழியப்பட்டு அது நாடாளுமன்றம் வரை வந்தது.

இதனைப் போலவே இன்னும் பல முன்மொழிவுகள் இருக்கின்றன. ஆகவே, தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடி சரியான ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

இதனை விடுத்து நான் மாத்திரமே சமஷ்டியைப் பற்றிப் பேசினேன் என்றும் மற்றவர்கள் வாய்மூடி இருந்தார்கள் என்றும் கூறுவது குறுகிய அரசியல் லாபம் கொண்டதாக இருக்குமே தவிர, அர்த்தபுஷ்டியான ஒரு தீர்வை நோக்கிச் செல்கின்ற வழிமுறையாக இருக்காது” என தெரிவித்துள்ளார்.

அநுரவின் சதியை முறியடிக்க சஜித்திற்கு பொன்னான வாய்ப்பு : என்கிறார் கம்மன்பில

அநுரவின் சதியை முறியடிக்க சஜித்திற்கு பொன்னான வாய்ப்பு : என்கிறார் கம்மன்பில

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011