உணவகம் என்ற போர்வையில் மதுபான விடுதி - உரிமையாளர் கைது
மிரிஹான பிரதேசத்தில் உணவகம் என்ற போர்வையில் இயங்கி வந்த மதுபான விடுதியொன்றை சுற்றிவளைத்துள்ளனர்.
பாணந்துறை வலான ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, 57 வகையான மதுபான போத்தல்கள், 119 பியர் ரின்கள் மற்றும் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் என்பவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
உரிமையாளர் கைது
இதனையடுத்து, மதுபான நிலையத்தை நடத்திவந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு கண்டெடுக்கப்பட்ட மதுபானத்தின் பெறுமதி 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அங்குள்ள மதுபான போத்தல்களில் சட்டவிரோத மதுபானம் கலந்து விற்பனை செய்யும் கொள்ளையொன்றும் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
