மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை(CEB) சமர்ப்பித்த முன்மொழிவு குறித்து பெப்ரவரி 25 ஆம் திகதி பொது கருதுக் கணிப்பை தொடங்குவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
பெப்ரவரி 25 முதல் மார்ச் 18 வரை வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் கருத்துக் கணிப்பை நடத்துவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் முடிவு
இந்த கருத்துக் கணிப்பு 9 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்படவுள்ளதுடன், அதனப்படையில் வரும் காரணிகளை அடிப்படையாக கொண்டு மின் கட்டண திருத்தம் குறித்து ஆணைக்குழு முடிவெடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், அதாவது ஏப்ரல் 1 முதல் ஜூன் 31 வரை மின்சார கட்டணங்களில் 13.56 சதவீத அதிகரிப்பை எதிர்பார்த்து, இலங்கை மின்சார சாபை தனது முன்மொழிவை PUCSL க்கு 13 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தது.
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மின்சார கட்டணங்களில் 11.57 சதவீத அதிகரிப்பை இலங்கை மின்சார சபை முன்மொழிந்த போதிலும், ஆணைக்குழுவின் ஒப்புதல் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |