உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறியவர்களுக்கு தண்டனை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

CID - Sri Lanka Police Duminda Dissanayake Easter Attack Sri Lanka Shani Abeysekara
By Sathangani Jun 13, 2026 07:19 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான புலனாய்வு தகவல்கள் முன்னரே கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க தவறிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்று நேரத்தை வீணடிப்பதை விட தாக்குதலை மிக எளிதாகத் தடுத்திருக்ககூடிய பொறுப்பில் இருந்தும் அலட்சியமாக செயற்பட்டவர்களை கண்டறிவதே தற்போதைய முக்கிய தேவையாகும்.

தலதா மாளிகையை முதலில் தாக்கியது விடுதலைப் புலிகள் அல்ல! ராஜித பகிரங்கம்

தலதா மாளிகையை முதலில் தாக்கியது விடுதலைப் புலிகள் அல்ல! ராஜித பகிரங்கம்

அலட்சியத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்

நாட்டில் சிறு சண்டை நடந்தால் கூட 119 என்ற அவசர அழைப்பு மூலம் காவல்துறையினர் விரைந்து செயற்படும் நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கும் இடங்கள் மற்றும் நபர்களின் பெயர்கள் உட்பட அனைத்து தகவல்களும் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கிடைத்தும் சம்பந்தப்பட்ட தேவாலயங்களுக்கு ஒரு காவல் நிலையத்தின் வாகனத்தைக் கூட அனுப்பாமல் வேடிக்கை பார்த்தது ஏன் என்ற பலத்த கேள்வி எழுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறியவர்களுக்கு தண்டனை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Punishment For Who Failed To Prevent Easter Attack

யுத்தகாலத்தில் கூட குண்டுதாரிகள் பற்றிய தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சோதனைகளை நடத்தி அச்சுறுத்தல்கள் தவிர்க்கப்பட்ட வரலாறுகள் உள்ள நிலையில், இந்தத் தகவல் கிடைத்தும் உயர் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

காவல்துறையினர் வாகனங்களையோ அல்லது வீதித் தடைகளையோ ஏற்படுத்த வேண்டாம் என உயர் மட்டத்திலிருந்து ஏதேனும் மறைமுக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.

2019 ஆம் ஆண்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்த சானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்ற உயர் அதிகாரிகள் மற்றும் அப்போதைய காவல்துறை உயர் மட்டத்தினர், மாகாணப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இந்த அலட்சியத்துக்கு பொறுப்பேற்க வேண்டும்.

சங்கீத்சனின் விடுதலை! நாமல் வெளியிட்டுள்ள பதிவு

சங்கீத்சனின் விடுதலை! நாமல் வெளியிட்டுள்ள பதிவு

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி

அவர்களில் பலர் இன்றும் அரச சேவையிலோ அல்லது ஓய்வூதியம் பெற்றுக்கொண்டோ சுதந்திரமாக வருவது கண்டிக்கத்தக்கது.

பயங்கரவாதக் குழுக்கள் திட்டமிடுவதை விட, அந்தத் திட்டத்தைத் தெரிந்து வைத்திருந்தும் தடுக்காமல் விட்ட பாதுகாப்புத் துறையினரின் அலட்சியமே 200க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகவும், நூற்றுக்கணக்கானோர் இன்று வரை மாற்றுத்திறனாளிகளாகப் பாதிக்கப்பட்டு போராடவும் காரணமாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க தவறியவர்களுக்கு தண்டனை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Punishment For Who Failed To Prevent Easter Attack

எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமாயின், இந்தத் தகவலைக் கையாள்வதில் அலட்சியமாக இருந்த அதிகாரிகளை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும்.

மேலும், இந்த தாக்குதல் விசாரணை தொடர்பான குழுக்கள் நியமனத்தில் கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் விமர்சனங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

அத்துடன் அரசாங்கம் ஒருபுறம் சுயாதீனக் குழு என்றும், மறுபுறம் திருச்சபையின் விருப்பப்படியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும் இரட்டை வேடம் போடுவதை நிறுத்தி, சட்டம் மற்றும் நீதியை அனைவருக்கும் சமமாக நிலைநாட்ட வேண்டும்“ என தெரிவித்தார்.

முதியோர் கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்!

முதியோர் கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! .


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026