புடினுடனான பேச்சுவார்த்தை வெற்றி! இலங்கைக்கு வருகை தந்த ரஷ்ய எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள்
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இருவர் இன்று காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சிலர் கட்டுநாயக்க விமான நிலையம் சென்று குறித்த இருவரையும் வரவேற்றிருந்தனர்.
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடுவதற்காக இவர்கள் இருவரும் இலங்கை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரச தலைவரின் கோரிக்கை
இதேவேளை, ரஷ்ய அரச தலைவர் புட்டினுக்கும், அரசத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி ஊடாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, இலங்கையில் தற்போது எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் எரிபொருள் வழங்கி உதவுமாறும் அரச தலைவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குறித்த கோரிக்கைமைய குறித்த பிரதிநிதிகள் இருவரும் இலங்கை அனுப்பப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
வலுக்கும் பொருளாதார சவால் - ரஷ்யாவிடம் சரணாகதியடைந்த கோட்டாபய!