ஈரானின் கண்மூடித்தனமான ஏவுகணை தாக்குதல் : ஐநா விற்கு பறந்தது கடிதம்
அமெரிக்காவின் (us)அல்-உதெய்த் விமானப்படை தளத்தை குறிவைத்து ஈரான் (iran)நடத்திய தாக்குதலை கண்டித்து கட்டார்(qatar), ஐ.நா. பொதுச்செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
கட்டார் வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலை "கட்டாரின் "இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின்" "மிகவும் ஆபத்தான அதிகரிப்பு" என்று விவரித்துள்ளது
ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஏவுகணை தாக்குதல்
ஈரானிய புரட்சிகர காவல்படையின் ஏவுகணை தாக்குதல் "பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலை" ஏற்படுத்தியதாகவும் அந்தக் கடிதம் கூறுகிறது.
"இந்த அப்பட்டமான ஆக்கிரமிப்பிற்கு எதிராக சர்வதேச சட்டத்தின்படி நேரடியாக பதிலளிக்கும் உரிமையை கட்டார் அரசு கொண்டுள்ளது" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழைக்கப்பட்ட ஈரான் துதுவர்
தாக்குதல் தொடர்பாக ஈரானிய தூதுவரை வரவழைத்துள்ளதாகவும் கட்டார் தெரிவித்துள்ளது.
திங்களன்று, அமெரிக்க தளத்தின் மீதான ஏவுகணை தாக்குதலை கட்டார் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளதுடன் ஏவுகணைகள் முழுமையாக இடைமறிக்கப்பட்டதாகவும் கூறியது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
