நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாச

Sajith Premadasa Sri Lanka Politician Sri Lankan political crisis
By Kiruththikan Nov 10, 2022 10:26 AM GMT
Report

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார். 

இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1.7 மில்லியன் பேர் மாற்றுத்திறனாளிகள். இந்நாட்டிலுள்ள பொது வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்,அதாவது மருத்துவ வசதிகள்,கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகளைப் பெறுவதில் அவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் மற்றும் திறன்கள் அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் பொதுவான குடிமக்களை இலக்காகக் கொண்ட அனைத்து நலன் மற்றும் மேம்பாட்டு செயல்முறைகளிலும் மாற்றுத்திறனாளிகளை ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதற்கு மாற்றுத்திறனாளிகள் சமூகம் எதிர்நோக்கும் பௌதீக மற்றும் கொள்கை ரீதியான தடைகள் அகற்றப்பட வேண்டும்.அவ்வாறே,மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் சவால்களை சமாளிக்க அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்.

இதன் பிரகாரம்,இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி,பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாச | Question Opposition Sajith Under Standing Orders

01. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயல்திட்டம் 2020 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு முன்வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அப்போதைய பொறுப்பான அமைச்சர் 2020.02.06 ஆந் திகதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த செயல்திட்டம் இது வரை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை? இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?

02. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 33 ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின் பிரகாரம் திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் இதுவரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் யாது? இதனை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறதா? அவ்வாறு எதிர்பார்க்கும் பட்சத்தில் எப்போது சமர்ப்பிக்கப்படும்?

03. காது கேளாத மாற்றுத்திறனாளிகள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற சைகை மொழி அவசியமாகும்.தற்போது வரைவு செய்யப்பட்ட சைகை மொழிச் சட்டமூலம் ஏன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை? இந்த சட்டமூலம் எப்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது?

04. இலங்கையிலுள்ள அரச நிறுவனங்களில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் எத்தனை பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்? அந்த எண்ணிக்கை போதும் என்று அரசாங்கம் கருதுகிறதா? அவ்வாறில்லாவிட்டால் எதிர்காலத்தில் அரச சேவைக்கு சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?

05. சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் பாடசாலை கல்வியைப் பெறுவதற்கு அரசாங்கத்திடமுள்ள திட்டம் என்ன? இந்த குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க போதுமான சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்களா? பாடசாலை கல்விக்குப் பிறகு இந்தக் குழந்தைகளை தொழிற்கல்விக்கு வழிநடத்த அரசாங்கத்திடமுள்ள திட்டம் யாது?

06. அணுகல் வசதிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் சமூகம் அரச நிறுவனங்களின் சேவைகளைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது அரசாங்கத்திற்கு தெரியுமா? அவ்வாறெனில்,அதற்காக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? எதிர்கால கட்டிட கட்டுமானத்திற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் மாற்றுத்திறனாளி சமூகத்தின் அணுகல் வசதிகள் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என்ற விதிகளை கொண்டு வர அரசாங்கம் செயல்படுமா?

07. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.5000/- உதவித்தொகையை சமுர்த்தி வங்கிகள் ஊடாக மாத்திரம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை யாது? இந்தக் கொடுப்பனவை சமுர்த்தி வங்கியின் ஊடாக மாத்திரம் வழங்குவதன் மூலம் மாற்றுத்திறனாளி சமூகம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளனர் என்பது அரசாங்கத்திற்கு தெரியுமா? இதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாது? என நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வியெழுப்பியுள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026