எதிர்காலத்தில் மேலும் பல உயிர்மாய்ப்புகள்! பிரதி அமைச்சர் பகிரங்கம்
எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலருக்கு நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் தற்கொலைகள் போன்ற சம்பவங்கள் பதிவாகலாம் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் தற்கொலை தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஒரு குழுவினர் சிறைக்குச் சென்றுள்ளதாகவும், இன்னும் ஒரு வரிசை சிறைக்கு செல்ல காத்திருப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம்
இதேவேளை, ராஜபக்ச குடும்பத்தில் வழக்குகள் இல்லாத எவரேனும் இருந்தால், அதை அறிவிக்கமாறும் அவர் வலியுத்தியுள்ளார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் மேலும் பலர் சிறைக்குச் செல்லக்கூடும் என்றும், அதற்கு முன்பாக தற்கொலைகள் நிகழலாம் என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 5 மணி நேரம் முன்