ஸ்கொட்லாந்தில் இந்தியர் மீது இனவெறி தாக்குதல்
ஸ்கொட்லாந்தில் இந்தியர் ஒருவர் இனரீதியாக விமர்சிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்கொட்லாந்து தலைநகர் எடின்பர்கில் வாழ்ந்துவரும் கேரளாவைச் சேர்ந்த பினு என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இளைஞர்கள் சிலரால் தாக்குதல்
வழக்கம்போல பணி முடித்து வீடு திரும்புவதற்காக பேருந்து நிலையம் ஒன்றில் காத்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞர்கள் சிலரால் இவர் தாக்கப்பட்டுள்ளார்.
முகத்தில் அந்த இளைஞர்கள் தொடர்ந்து குத்தியதால் அவர் மயக்கமடைய, இளைஞர்களில் ஒருவர் அவரது பையை எடுத்துக்கொண்டதுடன், அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்கள் அவர்கள்.
அங்கிருந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவலளிக்க, பினுவுடன் அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர்களும் தகவலறிந்து அங்கு வந்து சேர, மருத்துவ சிகிச்சைக்குப் பின் காவல்துறையினர் பினுவை அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இனரீதியாக தாக்குதல்
12 வருடங்களாக தான் அந்தப் பகுதியில் வேலை செய்து வரும் நிலையில், திடீரென தன் மீது இனரீதியாக தாக்குதல் நடத்தப்பட்ட விடயம் தன்னை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக பினு தெரிவித்துள்ளார்.
பொதுவாக இனவெறி தாக்குதல்கள் குறைவாக உள்ள ஸ்கொட்லாந்தில் இதுபோன்ற தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருவது இந்திய சமூகத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.