பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி : அதிரடியாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள்
குளியாப்பிட்டி (Kuliyapitiya) தொழில்நுட்ப கல்லூரியின் மாணவி ஒருவருக்கு பகிடிவதை கொடுக்கப்பட்ட சம்பவத்தில் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் வருட மாணவி ஒருவர் நேற்று (02.06.2025) ஆற்றில் குதித்து தவறான முடிவெடுக்க முயன்றுள்ளார்.
இதன் போது அருகில் இருந்த சிலரால் குறித்த மாணவி மீட்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பகிடிவதை
இதன்போது காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பகிடிவதை கொடுக்கப்பட்ட சம்பவத்தால் அவர் தவறான முடிவெடுக்க முயன்றது தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் தொழில்நுட்பக் கல்லூரியின் நான்கு மாணவர்களைக் கைது செய்துள்ளனர்.
குறித்த மாணவிக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டி காவல்துறையினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

செம்மணிப் புதைகுழியில் சிறுமி - பெண்களின் எலும்புக்கூடுகள் - அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
