தொடருந்து பணிப்புறக்கணிப்பு : ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்
கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடருந்து பணிப்புறக்கணிப்பால் தொடருந்து திணைக்களத்திற்கு ஏறக்குறைய 10 கோடி ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (11) தெரிவித்தார்.
சாதாரண நாளில் தொடருந்து துறையின் பயணிகள் போக்குவரத்து டிக்கெட் வருமானம் 4 கோடி மட்டுமே என்றும், அந்த வருவாயுடன் சரக்கு உள்ளிட்ட இதர வருவாயையும் சேர்த்தால் தினசரி வருமானம் சுமார் 5 கோடி என்று அதிகாரி கூறினார்.
தொடருந்து நிலைய அதிபர்கள்
திணைக்களத்தின் தலையீட்டால் தொடருந்து நிலைய அதிபர்கள் டிக்கெட் வழங்கத் தவறியதால், வேலை நிறுத்த நாட்களில் ஓடிய தொடருந்துகளில் பயணம் செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து நிலைய அதிபர்கள், தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள், துணை தொடருந்து நிலைய அதிபர்கள் உட்பட சுமார் ஆயிரம் தொடருந்து ஊழியர்களுக்கு பதவி விலக்கல் கடிதங்கள் அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |