நந்திக்கடலில் விடுதலைப்புலிகளை சந்தித்த பொன்சேகாவுக்கு ராஜபக்சர்களால் காத்திருந்த அதிர்ச்சி
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் கரண்ணகொட உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 2008 ஆம் ஆண்டு வரை இராணுவ நடவடிக்கைகளை சீர்குலைக்க முயன்றதாக இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனவரி 2008 இல் இடம்பெற்ற, பாதுகாப்பு கூட்டத்தில், ராஜபக்சர்கள் தனது சொந்த போர்க்கள உத்திக்கு முரணான ஒரு திட்டத்தை முன்வைத்ததாக பொன்சேகா கூறியுள்ளார்.
பொன்சேகாவின் கூற்றுப்படி, அவர் குறிப்பிடும் ஒரு காணொளியில் இடம்பெற்ற அழைப்பு பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து சவேந்திர சில்வாவுக்கு வந்தது என்றும் அதன் விடயங்கள் வெளிப்படுத்தப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
விடுதலைப் புலிகளின் படை
“அந்த நேரத்தில், அவர் வெலி ஓயாவில் நான்கு திசைகளிலிருந்தும் விடுதலைப் புலிகளின் படைகளைச் சுற்றி படைகளை நிறுத்தியிருந்தோம்.

இருப்பினும், மூவரும் தனது திட்டம் பயனற்றது என்றும் மோதலை நீடிப்பதாகவும் வலியுறுத்தினர்.
பல பக்கங்களிலிருந்து எதிரியைச் சுற்றி வளைப்பது உயிரிழப்புகளை அதிகரிக்கும் என்று வாதிட்டனர்.
அதற்கு பதிலாக, அவர்கள் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவுக்கு நேரடி முன்னேற்றத்தை முன்மொழிந்தனர். இது போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் என்று கூறினர்.
இது தன்னை ஊக்கப்படுத்தவும் இராணுவப் பிரசாரத்தைத் தடம் புரளவும் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதி.
பின்னர் அவர் போர் முடிவடைவதற்கு முந்தைய நாள், சீனாவில் இருந்த போதிலும், பாதுகாப்பான தகவல் தொடர்புகளைப் பயன்படுத்தி கொழும்புக்கு உத்தரவுகளை பிரப்பித்தார்.
இருப்பினும், அன்று காலை நடந்த ஒரு முக்கியமான கலந்துரையாடல் குறித்து தனக்குத் தெரிவிக்கப்படவில்லை.
பொன்சேகாவின் கூற்று
மேலும் பாதுகாப்புச் செயலாளர் நேரடியாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கலந்துரையாடலில் ஐ.சி.ஆர்.சி. பணிக்குழு, சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள் மற்றும் மற்றொரு அமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர், பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் விடுதலைப்புலிகள் அமைப்பில் உள்ள பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்டவர்களை சரணடைய வாய்ப்பு வழங்குவது குறித்து விவாதித்துள்ளனர்.
இது அவரது வெளிப்படையான உத்தரவுகளுக்கு எதிரானது.
விடுதலைப்புலிகள் அமைப்பின் முழுமையாகத் தோற்கடிக்கப்பட வேண்டும். பின்னணி ஒப்பந்தங்களோ தப்பிச் செல்லும் வழிகளோ இருக்கக்கூடாது என அவர் வலியுறுத்தினேன்.
மே 16ஆம் திகதியளவில், முல்லைத்தீவின் வடபகுதியில் முள்ளிவாய்க்கால் மற்றும் நந்திக்கடல் குளப்பகுதியில் 400 மீட்டர் பரப்பளவில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் சிக்கியிருந்தனர்.
இத்தகைய சூழ்நிலையிலும், விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவத்திடம் நேரடியாக சரணடைய மறுத்ததால், மூன்றாம் தரப்பிடம் சரணடைய அனுமதிக்கும் வகையில் ராஜபக்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்.
விஷ விதை
அதன்படி, விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களின் உயிரைக் காப்பாற்றத் தயார் நிலையில் அவர்கள் இருந்தனர்.

அது 2009 மே 17 அன்று ராஜபக்சர்களின் மனதில் விதைக்கப்பட்ட “விஷ விதை” என அவர் குறிப்பிட்டார்.
அந்த திட்டம் வெற்றியடைந்திருந்தால், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரகாகரன், பொட்டு அம்மான், சூசை அவரது மனைவி, தளபதி தீலீபன், ரமேஷ் உள்ளிட்ட பலர் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்கள்.
2009 மே 17ஆம் திகதி மகிந்த ராஜபக்சர்கள் அவர்களின் உயிரைக் காப்பாற்ற முயன்றார் என பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும்.
மேலும் “வெள்ளைக் கொடி” சரணடைவு சம்பவம் குறித்த பிரபலமான கதைப்போக்கை சில ஊடகத்தினர்கள் உருவாக்கினர். அவர் சரணடைய வந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டனர்.
“வெள்ளைக் கொடி சரணடைவு” கதை முழுமையாக உருவாக்கப்பட்ட ஒன்று. உண்மையில் நடந்ததை முற்றிலும் மாற்றி தமக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது என” பொன்சேகா தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |