அதிகரிக்கப்போகும் மின் கட்டணம் : எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்
Champika Ranawaka
Sri Lankan Peoples
Sri Lanka Electricity Prices
By Sathangani
இலங்கையில் புதிய மின்சார கொள்கையை அறிமுகப்படுத்துவதன் ஊடாகக் குறைந்தபட்ச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே சம்பிக்க ரணவக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
நிலக்கரி இறக்குமதி
அத்துடன் நுரைச்சோலை மின்நிலையத்திற்காகத் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையினால் ஏற்பட்டுள்ள நட்டத்தையும் மக்களே சுமக்க நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நிலக்கரி மோசடிக்குப் பொறுப்புக்கூற வேண்டிய நபர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மின்சாரப் பாவனையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அத்துல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |