"ஏழு மூளை கொண்டவரால் இலங்கைக்குப் பிடித்த ஏழரை" (படங்கள்)

People Basil Rajapaksa Trincomalee SJB Imran Maharoof Gotabaya Rajapaksa SriLanka Dollar Chinakkuda
By Chanakyan Jan 11, 2022 06:44 AM GMT
Report

ஏழு மூளை உள்ளவரின் செயலால் நாட்டுக்கு ஏழரை பிடித்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் (Imran Maharoof) தெரிவித்துள்ளார்.

நாட்டை காக்க அதிகாரத்தை கோரியவர்கள் இப்போது நாட்டை வெளிநாடுகளிடம் அடகு வைத்துள்ளனர் என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று பிற்பகல் எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள சீனக்குடாவில் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

1924 ஆம் ஆண்டு எண்ணெய் தாங்கிகளின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1930 அளவில் 101 எண்ணெய் தாங்கிகளும் பூரணமாக நிர்மாணிக்கப்பட்டன. சிட்னியை அடுத்து இரண்டாவது ஆழமான இயற்கை துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் காணப்படுவதால் துறைமுகத்தை அண்டிய பகுதியில் இவை நிர்மாணிக்கப்பட்டன.

இதில் ஒரு தாங்கியில் 12000 டொன் எண்ணெய் சேமிக்க முடியும் மொத்தமாக 1.2 மில்லியன் டொன் எண்ணெய் இதில் சேமிக்க முடியும். இதில் 15 தாங்கிகள் ஏற்கனவே 2004 இல் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவிட்டன.

தற்போது 24 தாங்கிகள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் 61 தாங்கிகளை இந்தியா - இலங்கை ஒன்றிணைந்து அபிவிருத்தி செய்யும் முயற்சி எனும் பெயரில் இந்தியாவுக்கு விற்கும் ஒப்பந்தத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த மொத்த தாங்கிகளிலும் 1.2 மில்லியன் எண்ணெய் சேமித்தால் நாளாந்தம் மில்லியன் டொலருக்கு அதிகமான வியாபாரம் எம்மால் செய்ய முடியும். எம்மால் தங்கத்தை விட பெரிய வியாபாரம் ஒன்றை செய்ய முடியும். ஆனால் இதை இலங்கை அரசாங்கம் வெறும் 500 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்கிறது.

1994 முதல் சுதந்திர கட்சி அல்லது பொதுஜன பெரமுனவை சேர்ந்த அரச தலைவர்களே இந்த நாட்டை ஆட்சி செய்கின்றனர். அவர்களால் எமது வளங்களை நிர்வகிக்க முடியவில்லை. இந்த விலை மதிப்பில்லா வளங்களுக்கு அவர்கள் பெற்றுக்கொண்ட தொகை வெறும் 500 மில்லியன் மட்டுமே. நாட்டை வங்குரோந்து நிலைக்கு கொண்டு வந்து டொலர் தட்டுபாட்டை ஏற்படுத்தி நாட்டின் பெறுமதிமிக்க சொத்துக்களை அடிமட்ட விலைக்கு விற்கின்றனர்.

சென்ற வருடம் அமைச்சர் கம்பன்பில இந்த எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து திரும்ப பெற இந்தியா ஒப்புக்கொண்டதாக கூறினார் இன்று அந்த தாங்கிகளோடு சேர்த்து எஞ்சிய அனைத்து தாங்கிகளையும் இந்தியாவுக்கு வழங்க ஒப்பந்தம் செய்கின்றனர்.

அமைச்சர் கம்பன்பிலவின் கட்சி யாப்பில் எமது சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பதில்லை என உள்ளது. ஆனால் அவர்தான் இன்று இந்தியாவுக்கு விற்கும் ஒப்பந்தத்தை கைச்சாத்திடவுள்ளார். இவ்வாறான ஒப்பந்தங்களை திருட்டு தனமாக நிறைவேற்றி கொள்ளவே அரச தலைவர் நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்துள்ளார்.

இன்று அமெரிக்க பிரஜைகள் சுகபோகம் அனுபவிக்க நாட்டு மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏழு மூளை உள்ளவரின் செயலால் நாட்டுக்கு ஏழரை பிடித்துள்ளது. நாட்டை காக்க அதிகாரத்தை கோரியவர்கள் நாட்டை வெளிநாடுகளிடம் அடகு வைத்துள்ளனர் என்றும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

"ஏழு மூளை கொண்டவரால் இலங்கைக்குப் பிடித்த  ஏழரை" (படங்கள்) | Rajapaksas Demanded Power Mortgage Country


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026