முருகன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு ஸ்டாலின் கடும் பிரயத்தனம்
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏனைய 6 பேரை விடுதலை செய்வது தொடர்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
ஆனால், அந்தப் பரிந்துரை மீது முடிவெடுப்பதில் ஆளுநர் கால தாமதம் செய்ததால், இதனைச் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.
[N45VEB[
பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து ஏனைய 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.கூடாலின் கூறியிருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதன்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏனைய 6 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையில் அமைச்சர்களான துரைமுருகன், ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.