பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய சந்தேக நபர்கள் கைது

India Bengaluru Rameswaram
By Laksi Apr 12, 2024 05:33 PM GMT
Report

பெங்களூர் (Bengaluru) - ராமேஸ்வரம் உணவகத்தின் (Rameswaram Cafe) குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மார்ச் 1 ஆம் திகதி பெங்களூரில் உள்ள பிரபல ராமேஸ்வரம் உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்பதுடன் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பத்து பேர் காயமடைந்தனர்.

குண்டு வைக்கப்பட்ட இடத்தில் குறைந்த கூட்டம் மற்றும் வெடிப்பின் தாக்கத்தை கட்டுப்படுத்திய பெரிய தூண் அருகில் இருந்ததன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்படவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலி கடவுச்சீட்டு விவகாரம்: இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!

போலி கடவுச்சீட்டு விவகாரம்: இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்!

இருவர் கைது

இந்த நிலையில், கடந்த மாதம் பெங்களூரில் உள்ள பிரபல ராமேஸ்வரம் உணவகத்தில் குண்டு வைத்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று (12) அறிவித்துள்ளது.

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய சந்தேக நபர்கள் கைது | Rameshwaram Cafe Blast Two Suspects Arrested

சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு! புத்தாண்டை முன்னிட்டு நடவடிக்கை

சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு! புத்தாண்டை முன்னிட்டு நடவடிக்கை

முஸ்ஸாவிர் ஹுசைன் ஷாஸெப் (Mussavir Hussain Shazeb) மற்றும் அப்துல் மத்தீன் தாஹா (Abdul Matheen Taha) ஆகியோர் கிழக்கு மித்னாபூர் (Midnapore) மாவட்டத்தின் கந்தி (Kanthi) பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய சந்தேக நபர்கள் கைது | Rameshwaram Cafe Blast Two Suspects Arrested

எனினும், அவர்கள் மேற்கு வங்காளத்துக்குள் பிரவேசித்த இரண்டு மணி நேரத்துக்குள் மாநில காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை, மத்திய உளவுத்துறை அமைப்புகள் மற்றும் மேற்கு வங்காளம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா காவல்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கஜகஸ்தான் செல்லவுள்ள ரணில் விக்ரமசிங்க! வெளியானது தகவல்

கஜகஸ்தான் செல்லவுள்ள ரணில் விக்ரமசிங்க! வெளியானது தகவல்

நீதிமன்றம் அனுமதி

தேசிய புலனாய்வு முகமை விசாரணையில், ஷாஸெப் தான் ராமேஸ்வரம் கஃபேவில் வெடிபொருளை வைத்ததாகவும், தாஹா தாக்குதலை திட்டமிட்டு தப்பி ஓடுவதற்கு உதவியாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: முக்கிய சந்தேக நபர்கள் கைது | Rameshwaram Cafe Blast Two Suspects Arrested

அத்துடன் இந்த வழக்கில் இது இரண்டாவது மற்றும் மூன்றாவது கைது நடவடிக்கை ஆகும். கடந்த மாதம், இவர்களுக்கு உதவி புரிந்ததாக கூறப்படும் முஸம்மில் ஷரீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய 18 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திய பின்னரே ஷாஸெப்பையும், தாஹாவையும் மேற்கு வங்காளத்தில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தநிலையில் இன்று (12) கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் மூன்று நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கட்டுநாயக்கவில் போராட்டம்! கறுப்பு பட்டி அணிந்து பணிகளில் ஈடுபடும் குடிவரவு அதிகாரிகள்

கட்டுநாயக்கவில் போராட்டம்! கறுப்பு பட்டி அணிந்து பணிகளில் ஈடுபடும் குடிவரவு அதிகாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024