சஜித்தின் மூச்சிலிருந்து உதவி கேட்கும் ரணில்!
Ranil Wickremesinghe
Sajith Premadasa
Sri Lanka
By Sumithiran
நாட்டில் தற்போது கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான 'ஹஸ்மா' ( சஜித்தின் மூச்சிலிருந்து) திட்டத்தின் கீழ் இந்த அத்தியாவசிய மருந்துகளை வழங்குமாறு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவரும் இந்தக் கோரிக்கையை ஏற்று, பட்டியலைத் தருமாறும், தனக்குத் தேவையான மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இருவரும் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.