தமிழர்,சிங்களவர் மத்தியில் இனவாதத்தை தூண்ட முயல்கிறார் ரணில்
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாகக் கூறி, நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயல்வதாக தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி, தமிழ், சிங்கள மக்களை மீண்டும் குழப்பப் பார்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இப்போது நாட்டில் இருக்கும் பிரதான பிரச்சினை எது? ஜனநாயக ரீதியிலான தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என அரசாங்கமே கூறுகிறது. இவ்வாறான நிலையில் விரைவாக தீர்க்க முடியாதவற்றைக்கூறி, மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை அரசாங்கம் தோற்றுவித்துள்ளது.
6,7 அதிபர்கள் ஆட்சி செய்தும் முடியாத காரியம்
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் 1988ஆம், 1989ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்டது. இதுவரையில் 6,7 அதிபர்கள் நாட்டை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள்கூட 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முயலவில்லை.
ஏன் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க கூட 6 தடவைகள் பிரதமராக இருந்திருக்கிறார். அப்போதுகூட ரணிலும் இதனை முயலவில்லை. ஆனால், இப்போது அதனை செய்ய முயல்கிறார்.
தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை தூண்ட முயற்சி
இதனூடாக
தமிழ், சிங்கள மக்கள் மத்தியில்
இனவாதத்தை
தூண்டப் பார்க்கிறார்.
13ஆவது திருத்த விடயத்தில்
ரணிலை எதிர்ப்பது யார்? அவரின்
அரசாங்கத்துக்குள் உள்ளவர்களே
ரணிலை எதிர்க்கிறார்கள்.
இந்த விடயத்தில் சர்வகட்சி
மாநாட்டை அரசாங்கம்
நடத்துவதற்கு முன்னர்,
அரசாங்கம் அனைவருடனும்
கலந்துரையாடி ஓர்
இணக்கப்பாட்டுக்குவந்து அதனை அறிவித்திருக்கலாம் என்றார்.

