பதில் அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் அதிபராக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் ரணில் தற்பொழுது பதில் அதிபராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
புதிய அதிபர் தெரிவு
புதிய அதிபரை தெரிவு செய்யும் வரை, அதிபர் பதவியின் அதிகாரங்கள், செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், நிறைவேற்றுவதற்கும் அரசியலமைப்புக்கு அமைய, ரணில் செயற்படுவார்.
புதிய அதிபர் தெரிவானது, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கு தாம் அறியப்படுத்தியதற்கு அமைய 7 நாட்களுக்குள் இடம்பெறும் என சபாநாயகர் ஊடகங்களுக்கு இன்று அறிவுத்தார்.
இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய அதிபர் அதிபர் தெரிவு செய்யப்படுவார் என நாடாளுமன்றம் விசேட அறிக்கை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி, சிறிலங்காவின் புதிய அதிபர் தொடர்பில் நாடாளுமன்றம் வெளியிட்ட விசேட அறிக்கை!