மொட்டுக்கட்சியை ஆதரிக்க மாட்டோம்! டக்ளஸ் தரப்பு ஆணித்தரம்

Douglas Devananda Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna
By pavan Apr 12, 2024 01:23 PM GMT
Report

அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐ.ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாறாக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது கட்சியின் ஆதரவு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,  கடந்த காலத்தில் அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுவதுக்கு முன்னர் வடமராட்சியில் ஆபரேஷன் லிபரேசன் என்னும் இராணுவ நடவடிக்கை நடந்தபோது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ராமச்சந்திரன் என்ற எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தார். அதேபோன்று மத்தியில் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தார்.

தமிழர்களை வைத்து தேர்தல் வியூகம் அமைக்கும் ராஜபக்சக்கள்! புலிப் புரளியை கிளப்பும் சதி அம்பலம்

தமிழர்களை வைத்து தேர்தல் வியூகம் அமைக்கும் ராஜபக்சக்கள்! புலிப் புரளியை கிளப்பும் சதி அம்பலம்

இந்திய கடற்படை 

அன்று வடமராட்சி பிரதேசத்தில் முழுமையாக இராணுவம் கைப்பற்றியதன் பின்னர் தொடர்ச்சியாக இராணுவம் ஏனைய இடங்களையும் கைப்பற்ற முனைந்தது. இதனால் எமது அரசியல் உரிமை அடியோடு அற்றுப்போகும் என்ற நிலைப்பாடு உருவானது.

இந்நிலையில் வடமராட்சி பிரதேச மக்களுக்கான உணவுப் பொருட்களை இந்திய கடற்படை கப்பல்கள் கொண்டு வந்தன. இலங்கை கடற்படை அவற்றை திருப்பி அனுப்பியது. ஆனால் இந்திய அரசு ஒதுங்கியிருக்கவில்லை.

மொட்டுக்கட்சியை ஆதரிக்க மாட்டோம்! டக்ளஸ் தரப்பு ஆணித்தரம் | Ranil Support Douglas Political Crisis

இந்தியாவின் மிராஜ் விமானங்கள் தாம்பரம் மீனம்பாக்கம் போன்ற பகுதியில் இருந்து புறப்பட்டு இலங்கையின் வடக்கே வடமராட்சி பிரதேசத்தில் மட்டுமல்லாது குடாநாடெங்கும் உணவுப் பொட்டலங்களை வீசியதுடன் இலங்கை அரசுக்கும் ஒரு வலுவான செய்தியை சொல்லி சென்றது.

அதாவது தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டால் இந்தியா பார்த்துக் கொண்டிருக்கமாட்டது. என்ற வலுவான செய்தியை தென்னிலங்கை இனவாத அரசுக்கு சொல்லிச் சென்றது. அதன் பின்னர்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவானது.

சந்திரிக்காவின் மகுடிக்கு ஆடுகின்றார் விக்னேஸ்வரன்! ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டு

சந்திரிக்காவின் மகுடிக்கு ஆடுகின்றார் விக்னேஸ்வரன்! ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டு

என்னை நம்புங்கள்

இவை அனைத்தும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் தான் நடந்தேறின. அதன் வலராற்று அனுபவங்களை கொண்டே நாம் சொல்கின்றோம் தற்போதைய அதிபர் ரணில் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் எம்மால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தர முடியும்.

அவர் அதை முன்னெடுப்பார் என்று. அதாவது எமது மக்களிடம் எமது கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடிக்கடி சொல்வார்.

மொட்டுக்கட்சியை ஆதரிக்க மாட்டோம்! டக்ளஸ் தரப்பு ஆணித்தரம் | Ranil Support Douglas Political Crisis

நீங்கள் ரணிலை நம்பவோ அல்லது நம்ப முடியாதென்ற நிலைப்பாட்டிலோ சிந்திக்க வேண்டியதில்லை. என்னை நம்புங்கள். என்னிடம் உங்கள் அரசியல் அதிகாரத்தை தாருங்கள். நான் மக்களது அடிப்படை பிரச்சினைகள் மட்டுமல்லாது அரசியல் உரிமை பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தருவேன் என்று.

அமைச்சரது இந்த உறுதியான நம்பிக்கைக்கு மக்கள் செவிசாய்த்தால் நிச்சயம் அனைத்து பிரச்சினைகளுக்குமான தீர்வுகளும் கிடைத்தே தீரும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024