ரணிலின் நிலைப்பாடு என்ன? பகிரங்க கேள்வி
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டும் என்று மக்கள் மத்தியில் நிலைப்பாடு உருவாகியுள்ளதால், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இது குறித்து கொண்டுள்ள நிலைப்பாடு என்ன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று ஸ்ரீசெய்தியாளர்களை சந்தித்தப் பேசிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அரச தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற நிபந்தனையில் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் வெளியிட்டிருந்தார்.
கோட்டா கோ ஹோம் என்ற கோஷத்துடனேயே பிரதமர் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தகவல் அனுப்பி இருந்தார்.
ரணில் விக்ரமசிங்க இந்த நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வருகின்றாரா என்பது எங்களுக்கு தெரியாது. எனினும் முழு நாட்டு மக்களும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற போராட்ட கோஷத்துடன் இருக்கின்றனர் என்றார்.