5000 ரூபாய் கிடைக்காததால் அதிகாரியை தாக்கிய பெண்!
police
sri lanka
ratnapura
By Shalini
இரத்தினபுரி - கொலொன்ன - கெம்பனே கிராம சேவகர் பிரிவில் 5,000 ரூபாய் கொரோனா நிவாரண கொடுப்பனவு கிடைக்காததால் பெண் ஒருவர் அதிகாரியை தாக்கியுள்ளார்.
குறித்த பிரதேசத்தின் விகாரையொன்றில் இந்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
இதில், குறித்த பெண்ணுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த குறித்த பெண் இரும்புக் கம்பி ஒன்றினால் அதிகாரியை தாக்கியுள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
தாக்கப்பட்ட அதிகாரி சிகிச்சைக்காக கொலொன்ன ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்