பெங்களூரு அணியின் பிரபல வீரருக்கு 12 லட்சம் ரூபா அபராதம் - காரணம் இது தான்...!
பெங்களூரு அணி கேப்டன் டு பிளஸ்சிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 15-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
பெங்களூரு அணி கேப்டன்
இப்போட்டியில், துப்பாட்டம் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து, 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்கள் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளிஸ்சிக்கு ஐபிஎல் நிர்வாகம் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
Faf Du Plessis is the first captain to receive a penalty for a slow overrate in the IPL 2023.☑️???#Ashwin #dineshkarthik #RoyalChallengersBangalore #Siraj #KatrinaKaif #Kohli #Bengaluru #GautamGambhir #BabarAzamIsOurRedLine #LSGvsRCB #AmritpalSingh #WWERaw #FafduPlessis pic.twitter.com/LCV0w3wQ2r
— Khan Dada (@khandada92786) April 11, 2023
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் கேப்டன் டு பிளிஸ்சிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
