உண்மையான தமிழர் வரலாற்றை இனி உலகறியும் - சீமான் வெளியிட்ட தகவல்
உண்மையான வரலாற்றை பாடப்புத்தகங்களில் இடம்பெறுவதற்கு உழைத்த அறிஞர் குழுவிற்கு நன்றி தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அந்த அறிக்கையில்,
புலம்பெயர் நாடுகளில் “அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை” எனும் அமைப்பினால் வெளியிட்ப்பட்ட தமிழ் குழந்தைகளுக்கான பள்ளிப் பாடப் புத்தகங்களில் தமிழர்களின் வரலாறு யாவும் முற்றிலும் தவறாக திரிக்கப்பட்டு - பதிவு செய்து விடக்கூடாது என்ற நோக்கில் தவறுகளைச் சுட்டிக்காட்டி கருத்துக்களைத் தெரித்திருந்தேன்.
இந்நிலையில் அப்பாடப் புத்தகங்களின் திருத்தப்பட்ட பக்கங்கள் என் பார்வைக்கு அனுப்பியிருந்தனர். உண்மையான வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்ய அவ்வமைப்பு செயல்பட்டிருப்பதை கண்டு மகிழ்வுற்றேன்.
இதற்காக உழைத்திட்ட அறிஞர் குழுவிற்கும் உலகத்தமிழர்களுக்கும் மற்றும் தமிழர் அமைப்புக்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் அன்பினையும் தெரிவித்துக் கொள்கின்றேன என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
