தமிழர்களின் கூட்டுதுன்பங்களை இனப்படுகொலையாக அங்கிகரிக்க வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Shalini Balachandran May 18, 2024 02:17 PM GMT
Report

தமிழர்களின் கூட்டுத் துன்பங்களும் பாரிய படுகொலைகளும் இனப்படுகொலையாக சர்வதேச சமூகத்தினாலோ அல்லது தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களினாலோ அங்கீகரிக்கப்படாத நிலையில் இதனை தமிழ் இனப்படுகொலையாக அங்கீகரிக்குமாறு வடக்கு கிழக்கு மாகாண தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழினப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (18) மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் கண்டுமணி லவகுகராஜா தலைமையில் இடம்பெற்ற போது கையளிக்கப்பட்ட மனுவிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2024 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள விளிம்புநிலை மக்கள், அடிமட்ட சிவில் சமூகங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து போரில் கொல்லப்பட்ட எமது அன்புக்குரியவர்களை நினைவு கூருகிறோம்.

தமிழரின் விடிவு காலம் நினைவேந்தலில் பிரகாசமாக மிளிர்கின்றது: சி.வி.விக்னேஸ்வரன்

தமிழரின் விடிவு காலம் நினைவேந்தலில் பிரகாசமாக மிளிர்கின்றது: சி.வி.விக்னேஸ்வரன்


சிறுபான்மை இனத்தவர் 

இத்தீவின் சிறுபான்மை இனத்தவர் என்ற வகையில், மூன்று தசாப்தங்களாக எமக்கெதிராக அரசினால் நடத்தப்பட்ட இரக்கமற்ற போரினால் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களாகிய நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

தமிழர்களின் கூட்டுதுன்பங்களை இனப்படுகொலையாக அங்கிகரிக்க வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Recognize Mullivaikkal As Tamil Genocide

2009ஆம் ஆண்டில், போரின் கடைசிக் கட்டங்களில் கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் தொடர்ச்சியான செல் தாக்குதல்களாலும், வான்வெளித் தாக்குதல்களாலும் கொல்லப்பட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விசனம்

காவல்துறையினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் : கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விசனம்


போரின் கடைசி கட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் “மோதல் தவிர்ப்பு வலயம்” என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்த பொதுமக்களுக்கு எதிராக இலங்கை அரசு இரசாயன குண்டுகள் மற்றும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியது.

தமிழர்களின் கூட்டுதுன்பங்களை இனப்படுகொலையாக அங்கிகரிக்க வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Recognize Mullivaikkal As Tamil Genocide

ஆதாரங்களின்படி 40,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போரின் கடைசி கட்டத்தில் கொல்லப்பட்டனர்.

உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் தடைபட்டதால், பட்டினியும் பசியும் நிலவியது அத்தோடு மக்களுக்கு உப்பு இல்லாமல் அரிசி கஞ்சி (கஞ்சி) வழங்கப்பட்டது.

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை இடை நிறுத்தம்: வெளியான அறிவிப்பு

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை இடை நிறுத்தம்: வெளியான அறிவிப்பு

கனரக ஆயுதங்கள்

குழந்தைகள் கஞ்சி சேகரிக்கச் சென்றபோது அவர்கள் செல் தாக்குதலில் சிக்கினர் அத்தோடு பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் வரிசையில் நின்று உணவுப் பொருட்களை சேகரித்தபோது, அவர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

தமிழர்களின் கூட்டுதுன்பங்களை இனப்படுகொலையாக அங்கிகரிக்க வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Recognize Mullivaikkal As Tamil Genocide

போரின் முடிவில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அரச இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டனர்.

திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று நம்பி குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இராணுவத்திடம் ஒப்படைத்தனர்.

தனிநாட்டை அமைப்பதன் மூலம் தமிழினத்தை பாதுகாக்க முடியும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

தனிநாட்டை அமைப்பதன் மூலம் தமிழினத்தை பாதுகாக்க முடியும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

இனப்படுகொலை

ஆனால் அவர்களில் பலர் இராணுவத்தினரால் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்டவர்கள் இன்னும் திரும்பவில்லை. இந்த நிலையில், தமிழ்ச்சமூகம் இன்னமும் கூட்டுப் பேரதிர்ச்சியில் தவித்துக் கொண்டிருக்கிறது.

தமிழர்களின் கூட்டுதுன்பங்களை இனப்படுகொலையாக அங்கிகரிக்க வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Recognize Mullivaikkal As Tamil Genocide

அத்தோடு போரின் கடைசிக் கட்டத்தில் 40,000க்கும் மேற்பட்ட தமிழர்களின் கூட்டுத் துன்பங்களும் பாரிய படுகொலைகளும் இனப்படுகொலையாக சர்வதேச சமூகத்தினாலோ அல்லது தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களினாலோ இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே, தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தையும் இலங்கை அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறோம்.

15 வருடங்களாகியும் கொடூரங்களுக்கான நீதி கிடைக்கவில்லை: சுமந்திரன் பகிரங்கம்

15 வருடங்களாகியும் கொடூரங்களுக்கான நீதி கிடைக்கவில்லை: சுமந்திரன் பகிரங்கம்


மேலும் நாங்கள், 

  1. வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு 
  2. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உண்மை மற்றும் நீதி
  3. போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல்
  4. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் நபர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் 
  5. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டு வருதல்
  6. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள அனைத்து வகையான நில ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்
  7. சிறுபான்மை மத மற்றும் கலாச்சார தளங்களை ஆக்கிரமிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் 

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச்சட்டம் இரத்து செய்யுங்கள்” என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

தலைமன்னார் மேற்கு புனித லோறன்சியார் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011