பிறந்த குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை :விசாரணையில் வெளியான தகவல்

Sri Lanka Police Nuwara Eliya Sri Lanka Police Investigation
By Sumithiran Sep 12, 2024 11:47 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

புதிய இணைப்பு

லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயரொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த தோட்டத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவில் இருந்தே கடந்த 10 ஆம் திகதி சிசுவின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய ஓட்டோ சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது மாவனல்லை பகுதியில் இருந்து தமது தோட்டத்துக்கு வந்திருந்த பெண்ணொருவரின் பையே அது என அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய 24 வயதான பெண் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். தனக்கும், குறித்த ஓட்டோ சாரதிக்கும் இடையில் இருந்த தகாத உறவு காரணமாகவே குழந்தை பிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவனல்லை பகுதியில் தான் வேலை செய்யும் வீட்டில் வைத்து கடந்த 5 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளதாகவும், தனது சகோதரியின் உதவியுடன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சடலத்தை புதைப்பதற்காகவே ஓட்டோவில் அதனை அக்கரபத்தனை பகுதிக்கு எடுத்துவந்ததாகவும் காவல்துறையிடம் அப்பெண் வாக்குமூலமளித்துள்ளார்.

அதிகாலைவேளையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் சடலத்தை தாய் கண்டு அக்கம், பக்கத்தினருக்கு தகவல் வழங்கியதால் அதனை செய்யமுடியாமல்போனதாக ஓட்டோ சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் காவல்துறை பாதுகாப்புடன் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார். இப்பெண்ணையும், ஓட்டோ சாரதியையும் (12.09.2024) இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், குறித்த பெண்ணின் சகோதரியையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 

முச்சக்கரவண்டியிலிருந்து அழுகிய நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

முச்சக்கரவண்டியிலிருந்து சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அக்கரபத்தனை காவல்துறை பிரிவுக்குரிய ஹென்பொல்ட் தோட்டத்தின் டி.எல் பிரிவில் உள்ள தொடர் வீட்டு குடியிருப்புக்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்போல்ட் தோட்டப்பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியிலிருந்து நேற்று திங்கட்கிழமை (09) இரவு இந்த சிசு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த முச்சக்கரவண்டியில் துர்நாற்றம் வீசியதால் முச்சக்கரவண்டி சாரதியின் தாய், முச்சக்கரவண்டியை சோதனையிட்ட போது பின் பகுதியில் இருந்து சிசுவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கறுப்புநிற பொலித்தீன் உறையில் போடப்பட்டு சிவப்பு நிற துணியொன்றில் சுற்றி மறைக்கப்பட்ட நிலையில் இருந்த சிசுவின் சடலத்தை கண்டு அக்கரப்பத்தனை காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது.

மசாஜ் நிலையமொன்றில் இரண்டு இளம்பெண்களுக்கு நேர்ந்த துயரம்

மசாஜ் நிலையமொன்றில் இரண்டு இளம்பெண்களுக்கு நேர்ந்த துயரம்

சிசுவின் சடலத்தை மீட்ட காவல்துறையினர்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிசுவின் சடலத்தை மீட்டுள்ளனர். எனினும் சிசு தொடர்பானமேலதிக தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிறந்த குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை :விசாரணையில் வெளியான தகவல் | Recovery Of Infants Body From Tricycle

சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் !

இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் !

 சிசுவின் சடலம்

நுவரெலியா(nuwara eliya) மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டதன் பின்னர் விசாரணைகள் மேற்கொண்டு சிசுவின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (10) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

பிறந்த குழந்தை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை :விசாரணையில் வெளியான தகவல் | Recovery Of Infants Body From Tricycle

சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் . 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

விடத்தற்பளை, பாலையூற்று

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019