மசாஜ் நிலையமொன்றில் இரண்டு இளம்பெண்களுக்கு நேர்ந்த துயரம்
Sri Lanka Police
Gampaha
Sri Lanka Police Investigation
By Jaso
மசாஜ் நிலையமொன்றில் இரண்டு இளம்பெண்கள் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாலும்மஹர பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றுக்குள் வாள் ஏந்தியபடி நுழைந்த 6 பேர் அடங்கிய கும்பலே இரண்டு பெண்களை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக யக்கல காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
கடத்திச் சென்று கூட்டாக பலாத்காரம்
மசாஜ் நிலையத்தில் 5 பெண்கள் இருந்ததாகவும், சந்தேகநபர்கள் அவர்களை அறையில் அடைத்து வைத்து அவர்களிடம் இருந்த கைத்தொலைபேசிகள், பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து, அங்கிருந்த இரு பெண்களை கடத்திச் சென்று கூட்டாக பலாத்காரம் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் மேலதிக விசாரணை
கம்பகா(gampha) மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் ரோஹனவின் பணிப்புரைக்கமைய யக்கல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்