ஆதாரமின்றி கைவசமிருந்த ஒரு கோடி ரூபா! 19 வயது இளைஞன் கைது
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
உண்டியல் (Undial) முறைமை மூலம் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்த நபர் குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று( 18) இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, வேல்ல வீதி காவல்துறை பிரிவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது, கொழும்பு 05 பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து ஆதாரங்களை உறுதிப்படுத்த முடியாத ரூ. 10,467,000 பணமும், ஒரு போலி 1000 ரூபா நாணயத்தாளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்த சந்தேக நபரிடம் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |