றீ(ச்)ஷாவில் களை கட்டிய அட்சய பாத்திரம் - உணவுத் திருவிழாவின் முதலாம் நாள்!
மகிழ்ச்சியின் உச்சமாக அமைந்த றீ(ச்)ஷாவின் உணவுத் திருவிழா நேற்று (07.08.2026) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
உணவுத் திருவிழாவின் முதலாம் நாளான நேற்று தாயகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்து தமிழர்களின் பாரம்பரிய உணவுகளின் சுவையை அனுபவித்ததோடு, வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.
இந்த உணவுத் திருவிழாவில் தமிழர்களின் தனித்துவமான பாரம்பரிய உணவுகளான ஒடியல் கூழ், நண்டுப் பிரட்டல், பிட்டு, பனங்காய் பணியாரம் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
கண்கொள்ளாக் காட்சி
உணவுத் திருவிழாவில் கலந்துகொண்ட மக்களின் முகங்களில் தெரிந்த திருப்தியும் மகிழ்ச்சியும் இந்த விழாவின் வெற்றியை மேலும் மெருகூட்டியது.
நேற்றைய நிகழ்வின் வெற்றியைத் தொடர்ந்து இன்றைய நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

மாலை 5.00 மணிக்கு, நுழைவாயிலிலிருந்து பாரம்பரிய இசை முழங்க மக்களை வரவேற்று அழைத்து வரும் கண்கொள்ளாக் காட்சி அனைவரையும் மெய்மறக்கச் செய்யும்.
தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பெருமையை உலகறியச் செய்யும் இந்த நிகழ்வு, ஒவ்வொருவரும் தவறாமல் காண வேண்டிய சிறப்புமிக்க திருவிழாவாகும்.
எனவே, இந்த இனிய நிகழ்வில் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு, தமிழர் பாரம்பரியத்தின் இனிமையையும் கலை மரபின் அழகையும் நேரில் கண்டு களிக்குமாறு விழா ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
