ஜனாதிபதி செயலகத்திற்கு முன் கைதாகிய 44 பேருக்கும் கொரோனாவா?
By Shalini
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதான 16 பெண்கள் உட்பட 44 பேரினதும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதன்படி, அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கைதாகிய 44 பேரையும், இன்று (05) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்து செய்தல், வேதன முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆசிரியர் - அதிபர்கள் நேற்று (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 16 பெண்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி