யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகளுக்கு நிவாரணம் வழங்கி வைத்த மெசிடோ நிறுவனம்

Mannar Sri Lanka Myanmar
By Shalini Balachandran Mar 29, 2024 07:13 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யுத்தம் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக வருகை தந்து பாணந்துறையில் தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு அவசரமாக வீட்டிற்கான நிவாரணத்தை மன்னார் மெசிடோ நிறுவனம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (28) மாலை நேரடியாக சென்று வழங்கி வைத்துள்ளனர்.

மன்னார் மெசிடோ நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் நேரடியாக விஜயம் செய்து வழங்கி வைத்துள்ளனர்.

யுத்தம் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து பங்களாதேஷில் வாழ்ந்த நிலையில் அங்கிருந்து வெளியேறி தமது உயிரை பாதுகாத்துக் கொள்ள கடலில் பயணித்த போது கடல் மார்க்கமாக பயணித்த மியன்மார் முஸ்லிம் அகதிகள் 105 பேர் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு! பொதுமக்கள் விசனம்

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு! பொதுமக்கள் விசனம்

அகதிகள்

யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியை வந்தடைந்த மியன்மார் அகதிகள் 105 பேரையும் மீட்ட கடற்படையினர் யாழ் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குறித்த மியன்மார் அகதிகள் கொழும்பு பாணந்துறையில் தங்க வைக்கப்பட்டனர்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகளுக்கு நிவாரணம் வழங்கி வைத்த மெசிடோ நிறுவனம் | Relief For Myanmar Muslim Refugees

அவர்களுக்கு சர்வதேச அமைப்பினால் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023 டிசம்பர் வரையான ஒரு வருட காலம் அடிப்படை உதவிகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அவர்களின் உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில் இவ்வருடம் 2024 முதல் அவர்கள் பாணந்துறை பகுதியில் வாடகைக்கு அமர்ந்திருந்த வீடுகளுக்கான மாத வாடகையை செலுத்த முடியாத நிலையில் காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு! பொதுமக்கள் விசனம்

வவுனியாவில் முன்னறிவித்தலின்றி மின் துண்டிப்பு! பொதுமக்கள் விசனம்

மனிதாபிமான பணி

குறித்த மக்கள் இருந்த வீடுகளின் ஒப்பந்தம் முடிவடைந்தமையினால் வீடுகளின் இருந்து வெளியேற வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் இதனால் எவ்வித அடிப்படை உதவிகளும் இன்றி மியன்மார் அகதிகள் 105 பேரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த போது அவர்களுக்கான உடனடி மனிதாபிமான பணிகளை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) உடனடியாக சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியில் அவசர உதவிகளை வழங்கி இருந்தனர்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகளுக்கு நிவாரணம் வழங்கி வைத்த மெசிடோ நிறுவனம் | Relief For Myanmar Muslim Refugees

அதன் தொடர்ச்சியாக அந்த மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக பாணந்துறை பகுதியில் அவர்கள் தங்கியுள்ள வீடுகளின் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி அவர்கள் தொடர்ச்சியாக அந்த வீட்டில் தங்கி இருக்கும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

நேற்றைய தினம்(28) வியாழக்கிழமை பாணந்துரை பகுதிக்குச் சென்ற மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் குறித்த வீடுகளுக்கான வாடகை பணத்தை கையளித்துள்ளனர்.

"எல்லைகளை திறவுங்கள்" இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் விடுத்த உத்தரவு

"எல்லைகளை திறவுங்கள்" இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் விடுத்த உத்தரவு

நிவாரண பணி

வீட்டு உரிமையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அகதிகளையும் சந்தித்து அவர்களுக்கான வீட்டு நிவாரண பணியாக எதிர்வரும் ஒரு வருடத்திற்கான வீட்டு வாடகைக்கான நிதியை செலுத்தியுள்ளனர்.

17 குடும்பங்களில் தயார் நிலையில் இருந்த 15 குடும்பங்களுக்கு 33 லட்சத்து 15500 ரூபாய் நிதியும் இரண்டு குடும்பங்கள் தமது ஆவணங்களை சரி செய்யாத நிலையில் அவர்கள் குறித்த ஆவணங்களை உடன் சமர்ப்பிக்கும் போது அவர்களுக்கு 4 லட்சத்து 56 ஆயிரம் ரூபாவும் மொத்தமாக 3,771,500 ரூபா நிதி மெசிடோ நிறுவனத்தினால் அவர்களின் வீட்டு வாடகைக்காக பகிர்ந்தளிக்கபட்டுள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த முஸ்லிம் அகதிகளுக்கு நிவாரணம் வழங்கி வைத்த மெசிடோ நிறுவனம் | Relief For Myanmar Muslim Refugees

பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்ட மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு மன்னார் மெசிடோ நிறுவனத்தின் மனிதநேய பணி உதவியாக இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசினால் போதிய உதவிகள் மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படாத நிலையில் அந்த மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலில் எந்த தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள்! பசில் திட்டவட்டம்

முதலில் எந்த தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள்! பசில் திட்டவட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, Scarborough, Canada

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023