நெருக்கடியில் சிக்குண்ட இலங்கையர்களுக்கு விசேட நிவாரணம்
உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்கவுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறவுள்ளனர்.
உத்தேசத் திட்டத்தின் கீழ், இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா முதல் 7,500 ரூபா வரையிலான நிவாரணத் தொகையை மேற்குறித்த குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 1,765,000 சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், 730,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் முப்பத்து மூன்று இலட்சம் (3,300,000) முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களும் இந்நிவாரணத்திட்டத்தினுள் உள்வாங்கப்படவுள்ளனர்.
இதன் முதல் கட்டமாக அடுத்த வாரம் மே மாதத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளிவந்துள்ளன.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா
