24 மணி நேரத்திற்குள் அகற்றப்படும் ஆயுதப் படைகள்..! அரசாங்கத்தின் திடீர் முடிவு - சஜித் சீற்றம்
மிகிந்தலை புனித ஸ்தலத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை துரோக செயலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி,தேசத்துரோக மக்கள் ஆணை இல்லாத தற்போதைய அரசாங்கம்,வரலாற்று சிறப்பு மிக்க புனித ஸ்தலங்களிலிருந்து 24 மணி நேரத்திற்குள் ஆயுதப் படைகள்,காவல்துறைபடைகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகளை மீள அழைக்க முடிவு செய்துள்ளது.
விசேட அறிக்கை
நாட்டின் மேன்மைமிக்க அரசியலமைப்பினால் கூட உறுதிப்படுத்தப்பட்டுள்ள பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தல்,ஊக்குவித்தல் மற்றும் பாதுகாக்கும் பொறுப்பைக் கூட தற்போதைய அதிபர் தலைமையிலான அரசாங்கம் மீறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (03) விசேட அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்தார்.
குண்டர் தனமான செயல்
இந்தப் புனித ஸ்தலத்திற்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை நீக்கியது குண்டர் தனமான செயல் என அழைக்கலாம்.
பாதுகாப்பை நீக்குவதன் மூலம் வரலாற்றுப் பெறுமதி மிக்க தொல்பொருட்கள் திருடர்களுக்கு திறந்து விடப்படும் என்பதே இதன் அர்த்தம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
