இடுப்பு வலியால் அவதிப்படுபவரா நீங்கள் - கண்டிப்பாக இதை செய்யுங்கள்!
அனைத்து மனிதர்களும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை இடுப்புவலி.
பொதுவாக மனிதர்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவதற்கு உடல் உழைப்பு, மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள், விபத்துகள் காரணமாக சொல்லப்படுகிறது.
இதேவேளை, வயது அதிகரிக்கும் பொழுது தசை , தசை நார்கள் , நரம்புகள் போன்றவற்றின் செயல்திறன் பாதிக்கும் பொழுது இடுப்புவலி இன்னும் அதிகமாகிறது.
தீர்வு
இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் ஐஸ் பேக் வைத்து ஒத்தடம் கொடுத்தால், இருப்புவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
அடுத்து, தினமும் குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு உடற்பயிற்சி செய்வதும், தியானங்களில் ஈடுபடுவதும் இதற்கு சிறந்த தீர்வைக் தரும்.
இதே சமயம், எமது உணவுப் பழக்க வழக்கங்களும் இடுப்பு வலியைத் தூண்டுதற்கான மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது, எனவே நல்ல சத்தான உணவுகளை உண்பது, இயற்கையான எண்ணெய்களை உபயோகம் செய்வது போன்றவையும் நல்ல தீர்வாக அமைவதோடு, தூக்கமின்மை பிரச்சனையும் சரியாகிவிடும்.